மோகினி
கண்ணீரில் தீப்பொறி தெறிக்க வைக்கிறாள்
மோகினி
வேப்பம்பழச் சேலைகட்டி ஆடுகிறாள்
மோகினி
புன்னகையில் படுகொலை செய்கிறாள்
மோகினி
நெஞ்சைப் பிளந்து சுகமாக வசிக்கிறாள்
மோகினி
இதயத்தைப் பழுக்க வைத்துச் சம்மட்டி அடிக்கிறாள்
மோகினி
வெப்பாலையில் பெருமழை பொழிகிறாள்
மோகினி
என் மூச்சைக் குடிக்கிறாள்
மோகினி
என் உள்ளங்கையில் நடனமாடுகிறாள்
மோகினி
நெஞ்சில் குதியாளம் போடுகிறாள்
மோகினி
மண் வீட்டில் வாசஸ்தலம் கொள்கிறாள்
மோகினி
மாடுகளுக்குத் தீவனமிடுகிறாள்
மோகினி
எதிர்பாராதவிதமாக வீட்டு வாசப்படி வருகிறாள்
மோகினி
சொற்களின் பல்லை உடைக்கிறாள்
மோகினி
சூறைக்காற்றில் தேடி வர வைக்கிறாள்
மோகினி
மானத்தை ஒரு பொருளாகக் கொள்ளச் செய்தாள் இல்லை
மோகினி
உறவினர்கள்போல் உற்றார் (கொடியவர்) எவருள்ளார் ?
மோகினி
அலைமோத வைக்கிறாள்
மோகினி
ஒரு கானல் வழியில் கண்ணீரைக் கொண்டு வந்தாள் (வாராள் )
மோகினி
உன்மத்தம் கொள்ள வைக்கிறாள்
மோகினி
சிறிய நாட்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்
மோகினி
சிறிய உயிரை பல்லாங்குழி ஆடுகிறாள்
மோகினி
சிதிலமடையச் செய்கிறாள்
மோகினி
செழிக்கச் செழிக்கச் செய்கிறாள்
மோகினி
அற்பர்களை பெரும் பொருளாக்குகிறாள்
மோகினி
நல்லவனை மன்றாட வைக்கிறாள்
மோகினி
உறுதி கொள்ள வைக்கிறாள்
மோகினி
வெல்லத் தூண்டுகிறாள் (வெல்ல வைத்து விடுவாள் )
மோகினி
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் எரிகிறாள்
மோகினி
என்ன செய்தும் தணிந்தாள் இல்லை (நினைவுகள் )
மோகினி
(இப்படி)ஒரு கவிதைக்குப் பின் கொஞ்சம் தணிகிறாள்
மோகினி
பிற்பாடு விரி காற்றாவாள்
வே.ராமசாமி
|
Sunday, June 2, 2013
மோகினி
Subscribe to:
Posts (Atom)